Connect with us

தமிழ்நாடு

கேந்திர வித்தியாலயா பள்ளிகளில் தமிழ் வெறும் விருப்ப பாடம்தானா? சரமாரி கேள்விகளைக் கேட்ட நீதிமன்றம்!

Published

on

கேந்திர வித்தியாலயா பள்ளிகளில் தமிழ் மொழியைக் கட்டாயமாக்கக் கோரும் வழக்கை உயர் நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் மொழியைக் கட்டாயமாக்கக் கோரி, மதுரையைச் சேர்ந்த பொன்குமார் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றைத் தொடர்ந்து இருந்தார்.

இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் கேந்திர வித்தியாலயா பள்ளிகள் இயங்கி வருகின்றன. சமீபத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையில் கேந்திரிய வித்தியாலயா பள்ளிகள் தமிழ் கற்றுத்தரப்படாது. 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ஒரு வகுப்பில் 20 மாணவர்களுக்குத் தமிழ் படிக்க விருப்பம் இருந்தால் அவர்களுக்கு மட்டும் கற்றுத்தரப்படும். இதற்கான ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு எடுக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இது ஏற்புடையது அல்ல. கேந்திர வித்தியாலயா கல்வி நிறுவனம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்குக் கீழ் தான் வருகிறது, மேலும் தமிழகத்தில் உள்ள தமிழ் கற்றல் ஆகிய விதிகளுக்கு எதிராக இது உள்ளது. தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளில் 50 சதவீதம் தமிழ் மாணவர்கள் உள்ளனர். இப்படிப்பட்ட சூழலில் தமிழ் புறக்கணிக்கப்படுவது ஏற்படையது அல்ல. எனவே கேந்திர வித்தியாலயா பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடமாக இருக்க வேண்டும் என்றும், தமிழ் ஆசியர்களுக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற கிளை மதுரை பிரிவில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

இந்த வழக்கானது நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகத்தில் 2006-ம் ஆண்டு கல்வி சட்டத்தின் கீழ் 1 முதல் 10 வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்குத் தமிழ் கட்டாயம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படி இருக்கையில் தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளில் தமிழ் விருப்ப பாடமாக அறிவித்தது எப்படி என்று மனுதாரர் தரப்பிலிருந்து கேள்வி எழுப்பப்பட்டது.

கேந்திரிய வித்தியாலயா பள்ளி சார்பில் வாதாடிய வழக்கறிஞர், மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகள் படிப்பதற்காகதான் கேந்திரிய வித்தியாலயா பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அங்கு படிக்கும் மாணவர்களிள் 50 சதவீதத்தினர் வெளிமாநிலத்திலிருந்து இங்கு வந்து படிக்கும் மாணவர்களாக உள்ளனர். எனவே தமிழ் விருப்ப பாடமாகக் கற்பிக்கப்படுகிறது என்று தெரிவித்தனர்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், பிரெஞ்ச், ஜெர்மன், பெங்காலி உள்ளிட்ட மொழிகளை கற்கலாம். ஆனால் தமிழகத்தில் தமிழ் மொழியைக் கற்கக் கூடாதா? என கேள்வி எழுப்பினர். இது போன்ற வாதங்களை நாங்கள் ஏற்கமாட்டோம். பிரதமர் தாய் மொழியில் கற்பதை ஊக்குவிக்க வேண்டும் என்று பேசி வருகிறார். ஆனால் நீங்கள் இந்தி, ஆங்கிலத்தை மற்றும் கற்றுக்கொடுப்பது ஏன்? கேந்திரிய வித்தியாலயா பள்ளிகள் தமிழ் விருப்ப பாடமாக உள்ளது என்று கூறுவதை ஏற்க முடியாது. தமிழ் மொழி மட்டும் என நாங்கள் கேட்கவில்லை. அனைத்து பிராந்திய மொழிகளுக்காகவும் சேர்த்துத்தான் கேட்கிறோம். இப்படியே சென்றால் தமிழ் மொழி தெரிந்திருந்தால் கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளில் இடம் இல்லை என்ற நிலை கூட ஏற்பட வாய்ப்புள்ளது.

தாய் மொழியில் கற்கும் சீனா, ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகள் நல்ல முன்னேற்றத்தில் உள்ளன. வழக்கு குறித்த விரிவான தீர்ப்பை வழங்க, நாளை மீண்டும் வழக்கு விசாரிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.

author avatar
seithichurul
தினபலன்7 மணி நேரங்கள் ago

இன்றைய (27/09/2024) ராசிபலன்

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

சாதம் சாப்பிட்டாலும் உடல் எடையை குறைக்கலாம்!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

செவ்வாழை: தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதன் நன்மைகள்!

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

நவராத்திரி 2024: தேதிகள், சிறப்புகள் மற்றும் விவரங்கள்!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

காடை வாங்கினா இப்படி ஒருமுறை வறுவல் செஞ்சு பாருங்க… சுவையாக இருக்கும்!

வணிகம்19 மணி நேரங்கள் ago

ஜியோவின் தீபாவளி தமாகா: ஒரு வருட இலவச இணையம், ஆனாலும் ஒரு நிபந்தனை!

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

வெண்டைக்காய் நல்லது, ஆனாலும் இவர்கள் மட்டும் சாப்பிடக்கூடாது!

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

முள்ளங்கியுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் – எச்சரிக்கையுடன் இருங்கள்!

செய்திகள்19 மணி நேரங்கள் ago

தேசிய குடும்ப தினம்: குடும்ப உறவுகளை கொண்டாடும் சிறப்புநாள்!

வேலைவாய்ப்பு21 மணி நேரங்கள் ago

ரூ.34,000/- ஊதியத்தில் தமிழக அரசில் தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.15 லட்சம் சம்பளத்தில் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்5 நாட்கள் ago

செப்டம்பர் 23 முதல் செப்டம்பர் 29 வரையிலான வார ராசிபலன்!

சினிமா5 நாட்கள் ago

OTT-யில் அதிரவைக்கும் சைக்கோ திரில்லர்: உண்மை சம்பவத்தை தழுவி வந்த Sector 36!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஒரு வயது வரை குழந்தைகளுக்கு இந்த உணவுகள் வேண்டாம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

IT துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? Accenture நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

படிகாரம்: ஆரோக்கியத்திற்கும் அற்புதமாய் பயன்படும்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (22-09-2024)

இந்தியா2 நாட்கள் ago

ரூ. 10,000 முதலீடு செய்தால் ரூ. 31 லட்சம் கிடைக்கும்…! அசத்தலான POST OFFICE திட்டம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்2 நாட்கள் ago

ஏர்டெல்-ன் மூன்று புதிய பிரீபெய்ட் திட்டங்கள் அறிமுகம்!