தமிழ்நாடு
உலக நாடுகளுக்கு ஆச்சர்யமூட்டும் கீழடி ஆய்வுகள்!
மதுரை: கீழடி ஆய்வில் கிமு 2ம் நூற்றாண்டுக்கு முந்தையை பொருட்கள் கூட கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வருகிறது.
இதுவரை 6000க்கும் அதிகமான தொல்லியியல் சார்ந்த பொருட்கள் கிடைத்து இருக்கிறது. பாரசீக பாசி குறியீடு ஓடுகள் நிறைய கிடைத்து இருக்கிறது.
நேர்த்தியான முறையில் கட்டமைக்கப்பட்ட கழிவுநீர்கால்வாய்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தொழிற்கூடங்கள் செயல்பட்டதற்கான அடையாளங்களும் காணப்படுகிறது.
ஆரிய திராவிட வரலாற்றில் இந்த ஆதாரங்கள் பெரிய மாற்றத்தை உருவாக்கும். இந்தியாவில் திராவிட இனம் எங்கு எல்லாம் பரவி இருக்கிறது என்பதை தெள்ள தெளிவாக இந்த கீழடி ஆராய்ச்சி காட்டும்.
அதேபோல் தமிழ் மொழியின் தொன்மையை உலகிற்கு எடுத்துக் காட்டும் என்பதால், இந்த ஆராய்ச்சியை மத்தியப அரசு முடக்க பார்க்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.