சினிமா

திருப்பதியில் இருக்கேனே.. தமிழில் பேச முடியாதுன்னு சொன்ன கீர்த்தி சுரேஷ்.. கொதிக்கும் ரசிகர்கள்!

Published

on

நடிகை கீர்த்தி சுரேஷ் அஜித்தின் வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான போலா சங்கர் படத்தின் ரிலீஸை முன்னிட்டு திருப்பதியில் நேற்று சாமி தரிசனம் செய்தார்.

திருப்பதியில் நடிகை கீர்த்தி சுரேஷ் சாமி தரிசனம் செய்வதை அறிந்த பத்திரிகையாளர்கள் அங்கே படையெடுத்து அவரிடம் மைக்கை நீட்டினர்.

#image_title

தெலுங்கிலும், ஆங்கிலத்திலும் பேசி வந்த கீர்த்தி சுரேஷிடம் தமிழ் பத்திரிகையாளர் ஒருவர், தமிழில் பேசுங்க என கேட்க, “திருப்பதியில் இருக்கேனே” என சொல்லி விட்டு தமிழில் பேச மறுத்து விட்டு ஆங்கிலத்திலும் தெலுங்கிலும் நடிகை கீர்த்தி சுரேஷ் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து சம்பாதித்து வரும் கீர்த்தி சுரேஷ் திருப்பதியில் இருந்துக் கொண்டே தமிழில் பேச முடியாது என மறுத்ததற்கு ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்களில் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

#image_title

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அடுத்ததாக தமிழில் மாமன்னன் படம் வெளியாகிறது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி உள்ள மாமன்னன் படத்தில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ், மேலும், ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா, சைரன் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.

தன்னைப் பற்றி சோஷியல் மீடியாவில் நெகட்டிவிட்டி பரவுவதை உடனடியாக உணர்ந்து கொண்ட கீர்த்தி சுரேஷ் அதனை உடனடியாக மடை மாற்ற தனது கவர்ச்சி போட்டோக்களையும் களமிறக்கி உள்ளார்.

அஜித் நடித்த வேதாளம் படத்தில் அஜித்துக்கு தங்கையாக லக்‌ஷ்மி மேனன் நடித்திருந்தார். ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தில் சூப்பர்ஸ்டாருக்கு சிஸ்டராக நடித்த கீர்த்தி சுரேஷ் தற்போது சிரஞ்சீவிக்கு தங்கச்சியாக போலா சங்கர் படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹீரோயினாக நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து தங்கை கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

seithichurul

Trending

Exit mobile version