சினிமா

நடிகை கீர்த்திச் சுரேஷ்க்கு 2 மாதங்கள் ஓய்வு தேவை!

Published

on

நடிகை கீர்த்திச் சுரேஷ் குறுகிய காலத்தில் நடித்த ஏராளமான படங்களில் வெற்றியானது. சர்கார், சண்டைக்கோழி 2 என்ற இரு படங்களில் நடித்து முடித்துள்ளார். இப்படங்கள் அடுத்தடுத்து வெளிவர இருக்கிறது.

தமிழ்ப் படங்களில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை ஆனால் ஒரு மலையாளப்படம் நடிக்க இருக்கிறார். காரணம் 3 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக நடித்து வருவதால் அவருக்கு 2 மாதங்கள் ஓய்வு தேவைப்படுகிறதாம். இதுகுறித்து அவர் கூறியதாவது:

3 ஆண்டுகளில் இதனைப் படங்கள் நடித்திருக்கிறோமா என்று எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது. 3 ஆண்டுகளில் 20 கதைகள் கேட்டு வைத்திருக்கிறேன். ஆனால் சரியான துக்கம் இல்லை, ஓய்வு இல்லை.

2 மாதங்கள் முழு ஓய்வு எடுக்கப்போகிறேன். இதற்காக வெளிநாட்டுக்கெல்லாம் போகவில்லை. என் வீட்டிலேயே இருப்பேன். தோட்ட வேலை செய்வேன். கவிதை எழுதுவேன், சமையல் செய்வேன். வயலின் கத்துக் கொண்டிருந்தேன், அதைத் தொடர்வேன். இந்த ஓய்வுக்குப் பிறகு தான் நடிப்பேன் என்றார்.

Trending

Exit mobile version