சினிமா
நடிகை கீர்த்திச் சுரேஷ்க்கு 2 மாதங்கள் ஓய்வு தேவை!
நடிகை கீர்த்திச் சுரேஷ் குறுகிய காலத்தில் நடித்த ஏராளமான படங்களில் வெற்றியானது. சர்கார், சண்டைக்கோழி 2 என்ற இரு படங்களில் நடித்து முடித்துள்ளார். இப்படங்கள் அடுத்தடுத்து வெளிவர இருக்கிறது.
தமிழ்ப் படங்களில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை ஆனால் ஒரு மலையாளப்படம் நடிக்க இருக்கிறார். காரணம் 3 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக நடித்து வருவதால் அவருக்கு 2 மாதங்கள் ஓய்வு தேவைப்படுகிறதாம். இதுகுறித்து அவர் கூறியதாவது:
3 ஆண்டுகளில் இதனைப் படங்கள் நடித்திருக்கிறோமா என்று எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது. 3 ஆண்டுகளில் 20 கதைகள் கேட்டு வைத்திருக்கிறேன். ஆனால் சரியான துக்கம் இல்லை, ஓய்வு இல்லை.
2 மாதங்கள் முழு ஓய்வு எடுக்கப்போகிறேன். இதற்காக வெளிநாட்டுக்கெல்லாம் போகவில்லை. என் வீட்டிலேயே இருப்பேன். தோட்ட வேலை செய்வேன். கவிதை எழுதுவேன், சமையல் செய்வேன். வயலின் கத்துக் கொண்டிருந்தேன், அதைத் தொடர்வேன். இந்த ஓய்வுக்குப் பிறகு தான் நடிப்பேன் என்றார்.