சினிமா செய்திகள்
ஃபோர்ப்ஸ் 30 பட்டியலில் நடிகை கீர்த்தி சுரேஷ்..!- தென்னிந்தியாவிலிருந்து தேர்வான ஒரே நபர்
நடிகை கீர்த்தி சுரேஷ் 30 வயதுக்கு உட்பட்டோரில் சாதனை படைத்த 30 பேர் கொண்ட ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
2020-ம் ஆண்டுக்கான 30 வயதுக்கு உட்பட்டோரில் 30 சாதனையாளர்கள் இந்தியப் பட்டியலில் நடிகை கீர்த்தி சுரேஷ் இடம் பிடித்துள்ளார். கலை, இலக்கியம், தொழில், கல்வி, அறிவியல் எனப் பல துறை சார்ந்தோரும் இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். இந்த 30 பேருக்குள் கீர்த்தி சுரேஷ் மட்டுமே தென்னிந்தியாவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா துறையில் இருந்து நடிகை கீர்த்து சுரேஷ் உடன் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியான புல்புல் படத்தின் நாயகி த்ரிப்டி டிம்ரி ஆகிய இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்திய யூட்யூபர்களிலேயே அதிக சப்ஸ்க்ரைபர்ஸ் கொண்ட ஆஷிஷ் சின்ச்சிலானி இந்தப் பட்டியலி இடம் பிடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
2020-ம் ஆண்டுக்கான ஃபோர்ப்ஸ் பட்டியலில் 30 பேரில் ஒரே ஒருவர் மட்டுமே தென்னிந்தியாவைச் சேர்ந்தவர். இதற்கு நெட்டிசன்கள் சமுக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.