சினிமா செய்திகள்
கீர்த்தி சுரேஷா இது? பாவாடை தாவணியில் அசத்தலான புகைப்படங்கள்
தமிழ் மலையாளம் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் கீர்த்தி சுரேஷ் என்பதும் ரஜினி, விஜய், சூர்யா, விக்ரம் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்துள்ளார் என்பதும் குறிப்பாக மகாநதி என்ற திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்றவர் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் தமிழ் தெலுங்கு திரையுலகில் பிஸியாக இருந்து வரும் கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் தனது தாய் மேனகா மற்றும் தந்தை சுரேஷுடன் குருவாயூர் கோவிலுக்கு சென்றுள்ளார். பாவாடை தாவணி அணிந்து குருவாயூர் கோவிலின் முன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் மற்றும் பெற்றோர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
பாவாடை தாவணி அணிய வேண்டும் என்பது தனது நீண்ட நாள் கனவு என்றும் சினிமாவில் தவிர வேறு வெளியிடங்களில் தான் பாவாடை தாவணி அணிய வில்லை என்றும் தனது நீண்ட நாள் கனவு இன்று நனவாகி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.3
A blissful morning after Guruvayur temple darshan ????????????
Thank you to @PoornimaPranaah, I have been meaning to wear this half saree and finally I did.
And to my mom for being the stylist ????#TraditionalVibes #TempleVisits pic.twitter.com/mFebbz84rC— Keerthy Suresh (@KeerthyOfficial) April 2, 2021