சினிமா செய்திகள்
முதன்முறையாகத் தன் காதல் கணவர் குறித்து மனம் திறக்கும் ‘கயல்’ ஆனந்தி!
சமீபத்தில் தனது காதலரைக் கரம் பிடித்துள்ள நடிகை கயல் ஆனந்தி தனது காதலர் மற்றும் திருமணம் குறித்து ரசிகர்களுக்காக மனம் திறந்துள்ளார்.
நடிகை கயல் ஆனந்தி சமீபத்தில் தனது காதலர் சாக்ரடீஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தெலங்கானாவின் இவரது திருமணம் நடைபெற்றது. மிகவும் எளிமையாக நடைபெற்ற திருமணத்தில் குடும்பத்தார் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். சாக்ரடீஸ் மூடர் கூடம் பட இயக்குநர் நவீனின் உறவினர். நவீனிடம் தான் சாக்ரடீஸ் உதவி இயக்குநராகப் பணியாற்றி வருகிறார்.
முதலில் வீட்டில் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என செய்தி வெளியானது. ஆனால், படப்பிடிப்பித் தளத்தில் துளிர்ந்த காதலால் ஆனந்தியை கரம் பிடித்துள்ளார் சாக்ரடீஸ். இதுகுறித்து ஆனந்தி கூறுகையில், “உங்களது வாழ்க்கையை ஒருவருடன் செலவிட முடியும் என்ற நம்பிக்கை ஏற்படும் போது எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அவருடன் இணைந்து வாழ்க்கையைத் தொடங்க வேண்டும் எனத் தோன்றும். நீண்ட ஆண்டுகளாகத் தொடரும் எங்களது பயணத்தில் எவ்வளவோ கடுமையான கஷ்டங்களை சேர்ந்தே கடந்து இருக்கிறோம். ஒருவருக்கு ஒருவர் துணையுடன் இந்த உலகையே வெல்ல முடியும் என உணர்ந்திருக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
The beginning of new chapter… pic.twitter.com/IwUcet0BsH
— Anandhi (kayal) (@anandhiactress) January 9, 2021