சினிமா செய்திகள்

ஓட்டு போடாத நட்சத்திரங்கள் குறித்து டுவிட் போட்ட கஸ்தூரி: அவர் ஓட்டு போட்டாரா?

Published

on

நேற்று முன்தினம் தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்ற நிலையில் திரையுலக நட்சத்திரங்கள் பலர் ஆர்வத்துடன் முன்வந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினார்கள் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், சூர்யா, கார்த்தி, விக்ரம் போன்ற மாஸ் நடிகர்கள் அனைவருமே வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ஒரு சில நடிகர் நடிகைகள் வாக்களிக்கவில்லை என்று சர்ச்சை எழுந்தது.

இந்த நிலையில் நடிகை கஸ்தூரி தனது டுவிட்டரில் பல உச்ச நட்சத்திரங்கள் தங்கள் வாக்கை செலுத்த நிலையில் ஒரு சில நடிகர் நடிகைகள் வாக்களிக்காமல் இருந்துள்ளனர் என்றும் அவர்களில் ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா, விஷால், நயன்தாரா, வெற்றிமாறன், விக்னேஷ் சிவன் ஆகியோர்கள் ஓட்டுப் போட்டார்களா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

ஆனால் அதே நேரத்தில் கஸ்தூரியே ஓட்டு போடவில்லை என்பதை அவரே தனது டுவிட்டரில் ஒப்புக்கொண்டுள்ளார். தவிர்க்க முடியாத சிக்கல் காரணமாகவும், ஊரில் இல்லை என்ற காரணத்தினாலும் தன்னால் ஓட்டு போட முடியவில்லை என்ற வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார். ஓட்டு போடவில்லை என்ற வருத்தத்தை விட காசு பணம் பட்டுவாடா நடக்கும் போது காணாமல் போய்விட்டனே என்ற வருத்தம் அதிகமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

நடிகை கஸ்தூரி தானே ஓட்டு போடாமல் ஓட்டு போடாத மற்ற நட்சத்திரங்கள் குறித்து கேள்வி எழுப்புவது சரியா என்று அவரது டுவிட்டரில் கமெண்ட்ஸ் பகுதியில் பதிவாகி வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version