தமிழ்நாடு

அப்ப யார் தொல்லையால் குஷ்பு கட்சி மாறினாங்க? உதயநிதிக்கு கஸ்தூரி கேள்வி

Published

on

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார் என்பது தெரிந்ததே. அவருடைய பிரச்சாரத்திற்கு நல்ல வரவேற்பு இருப்பதாகவும் இதனை அடுத்து அவர் ஆவேசமாக சில கருத்துக்களைப் பேசி வருவதாகவும் தெரிகிறது

இந்த நிலையில் நேற்று அவர் தேர்தல் பிரசாரம் செய்தபோது மோடியின் தொல்லை தாங்காமல் தான், மோடியின் டார்ச்சர் தாங்காமல் தான் முன்னாள் மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி மற்றும் சுஷ்மா சுவராஜ் ஆகியோர் இறந்துவிட்டனர் என்று உதயநிதி பேசினார். அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது

இந்த நிலையில் உதயநிதியின் இந்த பேச்சுக்கு ஏற்கனவே சுஷ்மா சுவராஜ் மகள் மற்றும் அருண்ஜெட்லியின் மகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் நடிகை கஸ்தூரி இதுகுறித்து தனது டுவிட்டரில் ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

மோடி தொல்லை தாங்காம யஸ்வந்த் சின்ஹா கட்சி மாறிட்டார். அருண் ஜெட்லீ சுஷ்மா ஸ்வராஜ் இறந்தே விட்டார்கள். உதயநிதியின் உவ்வே பேச்சு. அப்ப யார் தொல்லையால் குஷ்பு கட்சி மாறினாங்க? சிதம்பரம் உதயகுமார், சாதிக் பாட்சா எப்படி இறந்தாங்க?

seithichurul

Trending

Exit mobile version