தமிழ்நாடு
பொம்பளமாதிரி இருந்தா கல்லை கூட விட்டு வைக்கமாடீங்களாடா? ஆவேசமான பிரபல நடிகை!
சில தினங்களுக்கு முன்னர் இஸ்லாமிய இளைஞர் ஒருவர் தனது நண்பர்களுடன் தஞ்சை பெரிய கோயிலுக்கு சென்று அங்கிருந்த சிலைகளுடன் போட்டோ எடுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
காரணம், அந்த இளைஞர் அங்கிருந்த பெண் சிலைகளுடன் போட்டோ எடுத்துள்ளார். அதில் பெண் சிலைகளை கட்டிப் பிடித்தும், முத்தம் கொடுத்தும் போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார். இது வைரலாக பரவ இந்த செயலை செய்த முஜிபுர் ரஹ்மான் என்ற அந்த இளைஞரை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறைச்சாலையில் அடைத்தனர்.
இந்நிலையில் அந்த இளைஞனின் செயலுக்கு ஆவேசமடைந்த நடிகை கஸ்தூரி, பிடிச்சு ஜெயில்லே போட்டுட்டாங்க. ரம்ஜான் கொண்டாடினானாம்! வாக்குமூலம் குடுத்துருக்கான். ச்சை! பொம்பளமாதிரி இருந்தா கல்லை கூட விட்டு வைக்கமாடீங்களாடா? முஜிபுர் ரஹ்மான்! எவ்வளவு பெரிய தலைவர் பேரை வச்சிக்கிட்டு எவ்வளவு சின்ன புத்தி செயல்! என பதிவிட்டுள்ளார்.