இந்தியா
காஷ்மீர் தாக்குதல் நடத்திய தீவிரவாதி பற்றிய திடுக்கிடும் தகவல்!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு மற்றும், துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த கொடூர தாக்குதல் சம்பவத்தில் வெடிபொருட்கள் நிரப்பிய காரை ஓட்டி வந்த தற்கொலை படை தீவிரவாதி பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளது.
புல்வாமா மாவட்டத்தின் ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் 48 சிஆர்பிஎஃப் வீரர்கள் வாகனம் ஒன்றில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென வெடிகுண்டு நிரப்பபட்ட கார் ஒன்று சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது மோதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் வீரர்கள் சென்ற வாகனம் வெடித்து உருக்குலைந்தது. அதில் 48 சிஆர்பிஎஃப் வீரர்களும் சம்பவ இடத்திலேயே வீரமரணம் அடைந்தனர்.
இதனையடுத்து இந்த தாக்குதல் சம்பவத்துக்கு ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில், தாக்குதல் நடத்திய தீவிரவாதியை பற்றிய தகவல்கள் மற்றும் புகைப்படம் வெளியாகியுள்ளது. வெடிகுண்டு நிரப்பப்பட்ட காரை ஓட்டி வந்த தற்கொலைப் படை பயங்கரவாதி அடில் அகமது அலியாஸ் வாகர் என்றும் அவர் புல்வாமாவில் உள்ள காக்கிநாடா பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு இறுதியில் தான் இந்த பயங்கரவாதி ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பில் சேர்ந்தார் என்றும் அவர் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத பயிற்சி பெற்றவர் என்றும் கூறப்படுகிறது.