தமிழ்நாடு

1 முதல் 8 வகுப்புகளுக்கு பள்ளிகள் இன்று விடுமுறை! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

Published

on

ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று ஒரு நாள் பள்ளிகள் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக கடந்த சில நாட்களாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் கடந்த வாரம் முதல் மீண்டும் பள்ளிகள் இயங்க தொடங்கியது என்பதும் ஒரு சில மாவட்டங்களுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று பெய்த கனமழை காரணமாக சாலையில் தண்ணீர் தேங்கி உள்ளதால் கரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை என்றும் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு மட்டும் இன்று ஒரு நாள் பள்ளிக்கு வரவேண்டாம் என்றும் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார்.

இருப்பினும் 9ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் இயங்கும் என்றும் அதேபோல் கல்லூரிகளும் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version