தமிழ்நாடு

அமைச்சர்கள் பேசுவதை பார்த்து மக்கள் சிரிக்கிறார்கள்: கருணாஸ் அதிரடி!

Published

on

முக்குலத்தோர் புலிப்படைய சேர்ந்த திருவாடனை தொகுதி எம்எல்ஏ கருணாஸ் சர்ச்சைக்குறிய விதத்தில் பேசியதால் அவர் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின்னர் அவர் சில நாட்கள் கழித்து நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார்.

ஆளும் கட்சிக்கும், அமைச்சர்களுக்கும், முதல்வருக்கும் எதிராக பேசிய கருணாஸ் சிறையில் இருந்து ஜாமீனில் வந்த பின்னரும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இந்நிலையில் நேற்று சென்னை சாலிகிராமத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அமைச்சர்களின் விமர்சனங்கள் குறித்து பேசினார்.

அதில், இந்த அதிகாரம் எவ்வளவு நாட்கள் இருக்கப் போகிறது. மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அமைச்சர்கள் பேசுவதைப் பார்த்து சிரிக்கிறார்கள். சாதாரண பாமரனையும் அமைச்சராக உருவாக்கக் கூடிய ஜெயலலிதாவால் நீங்களெல்லாம் ஆளானீர்கள்.

நான் எப்படி கீழே இருந்து மேலே வந்தேனோ அதுபோலத்தான் அமைச்சர்களும் வந்தனர். நான் போராளி, அரசியல்வாதி அல்ல. தனி அமைப்புடன் தோழமையாக வந்தவன் நான். எனக்கும் அமைச்சர்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன என தெரிவித்தார் கருணாஸ்.

seithichurul

Trending

Exit mobile version