தமிழ்நாடு
தேர்தலில் போட்டியில்லை, ஆனால் அதிமுகவை தோற்கடிப்போம்: கருணாஸ்
கடந்த முறை அதிமுக கூட்டணியில் இணைந்து திருப்புவனம் தொகுதியில் போட்டியிட்ட முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் இந்த முறை அதிமுக கூட்டணியிலிருந்து சீட் கிடைக்காததால் விலகினார்.
அதன் பின்னர் திமுகவுக்கு ஆதரவு தருவதாக கூறி தனது ஆதரவை வாபஸ் பெற்றார். அதேபோல் தினகரனின் அமமுகவிலும் அவருக்கு சீட் கிடைக்கவில்லை. இந்த நிலையில் தற்போது அதிரடியாக வரும் தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை கட்சி போட்டியிடவில்லை என அறிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் ஐந்து வருடங்கள் எம்எல்ஏ பதவியை வகித்து விட்டு தற்போது அதிமுகவுக்கு எதிராகவே திரும்பி இருப்பது குறித்து நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.