தமிழ்நாடு

கருணாஸ் நிபந்தனை ஜாமீனில் விடுதலை!

Published

on

கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் சர்ச்சையாக பேசிய திருவாடனை தொகுதி எம்எல்ஏ நடிகர் கருணாஸை தமிழக காவல்துறை வழக்கு பதிவு செய்து சில தினங்களுக்கு முன்னர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் தற்போது நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சில நாட்களுக்கு முன்னர் நடிகரும் முக்குலத்தோர் புலிப்படையின் தலைவரும் திருவாடனை தொகுதி எம்எல்ஏவுமான கருணாஸ் சர்ச்சைக்குறிய விதமகா பேசினார். சாதி ரீதியாக கலவரத்தை ஏற்படுத்தும் விதமாகவும், முதல்வரையும், காவல்துறையையும் விமர்சித்து பேசினார்.

இதனையடுத்து கருணாஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து கருணாஸ் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை உருவாக்கியது. முதலில் புழல் சிறையில் அடைக்கப்பட்ட கருணாஸ் பின்னர் வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.

இதனையடுத்து கருணாஸ் ஜாமீன் கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கில் கருணாஸுக்கு நிபந்தனை ஜாமீன் கிடைத்தது. தொடர்ந்து ஐபிஎல் போட்டியின்போது நடைபெற்ற போராட்டத்தில் கிரிக்கெட் ரசிகர்களை தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கிலும் ஜாமீன் கிடைத்தது. இதனையடுத்து கருணாஸ் வேலூர் சிறையில் இருந்து நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

seithichurul

Trending

Exit mobile version