தமிழ்நாடு

84 தொகுதிகளில் தனித்து போட்டி: கருணாஸ் அறிவிப்பு

Published

on

கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை தற்போது அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது

மேலும் முக்குலத்தோர் சமுதாயத்தை அதிமுக அரசு புறந்தள்ளி விட்டதாகவும் கருணாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். அதிமுக செய்த துரோகத்தை முன்னிட்டு முன்னிறுத்தி 234 தொகுதிகளிலும் பிரசாரம் செய்வோம் என்று அதிரடியாக கருணாஸ் பேட்டி அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள கருணாஸ் 84 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடப் போவதாகவும், அரசுக்கு எதிராக மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்வோம் என்றும் வன்னியர் இட ஒதுக்கீடுக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்வோம் என்றும் அறிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் எங்களை நம்ப வைத்து ஏமாற்றி விட்டார் எடப்பாடி பழனிச்சாமி என்றும் கருணாஸ் குறிப்பிட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version