தமிழ்நாடு

துப்பாக்கியுடன் கலெக்டர் ஆபீஸில் நுழைந்த கருணாஸ்சால் பரபரப்பு!

Published

on

நடிகரும், திருவாடனை தொகுதி எம்எல்ஏவுமான கருணாஸ் துப்பாக்கியை இடுப்பில் சொருகி வைத்துக்கொண்டு ராமநாதபுரம் கலெக்டரை சந்திக்க அவரது அலுவலகத்துக்கு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் முன்விரோதம் காரணமாக இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதலில் வேதாரண்யம் பேருந்து நிலைய வளாகத்தில் இருந்த அம்பேத்கார் சிலை தகர்க்கப்பட்டது. மேலும் காவல் நிலையமும் தாக்கப்பட்டு பெரும் கலவரம் வெடித்தது. இந்த சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் ராமநாதபுரம் கலெக்டரை சந்திக்க கருணாஸ் இடுப்பில் துப்பாக்கியுடன் வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருணாஸ் ஒரு பள்ளி விழாவில் கலந்து கொள்ள கலெக்டருக்கும் அழைப்பு விடுக்க வந்ததாக கூறப்படுகிறது. கருணாஸிடம் துப்பாக்கி வைத்து கொள்ள லைசென்ஸ் இருப்பதால் அவர் எப்போதும் துப்பாக்கியுடன் தான் இருப்பார் என்று கூறப்படுகிறது. ஆனால் அவர் எப்போதும் காரில் தான் துப்பாக்கி வைத்திருப்பார். தற்போது வேதாரண்யம் பகுதியில் பதற்றமான சூழல் உள்ளதால் அவருடைய பாதுகாப்புக்காக துப்பாக்கியை இடுப்பில் வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

seithichurul

Trending

Exit mobile version