தமிழ்நாடு

சபாநாயகர் தனபால் மீது கருணாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

Published

on

நடிகர் கருணாஸ் திருவாடனை தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இவரது கவன ஈர்ப்பு தீர்மானத்தை 15 நாட்களாகியும் சபாநாயகர் தனபால் ஏற்காததால் அவருக்கு எதிராக செய்தியாளர்களை சந்தித்துள்ளார் கருணாஸ்.

நடிகர் கருணாஸ் முக்குலத்தோர் புலிப்படை சார்பாக தேர்தலில் போட்டியிட்டாலும் அவர் போட்டியிட்ட சின்னம் இரட்டை இலை. ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் சசிகலா அணியில் இருந்த கருணாஸ் இடையில் திமுக, தினகரன் என சுற்றிவந்து தற்போது மீண்டும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு கொடுத்துள்ளார்.

தினகரன் தரப்புக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த கருணாஸ் சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, ஆட்சிகாலம் முழுவதும் அரசுக்கே ஆதரவு என தெரிவித்தார். இந்நிலையில் நேற்று சட்டசபை நிகழ்வுகளுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் கருணாஸ். அப்போது, என்னுடைய சமுதாயம் சார்ந்த கோரிக்கைகளை முன்வைப்பதற்காக கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவர கடிதம் அளித்தேன். ஆனால், 15 நாட்களாகியும் அதனை சபாநாயகர் ஏற்கவில்லை. இது ஜனநாயகத்துக்கு விரோதமானது. அதனை சபாநாயகர் தொடர்ந்து கடைபிடித்து வருவது வருத்தத்தை ஏற்படுத்துகிறது என்றார்.

seithichurul

Trending

Exit mobile version