தமிழ்நாடு

கருணாஸ் பேச்சுக்கு அவரை கைது செய்தது சரியே: விஷால் அதிரடி!

Published

on

நடிகர் விஷால் சமீபத்தில் மக்கள் நல இயக்கம் என்ற அமைப்பை ஆரம்பித்து தனது அரசியல் பயணத்துக்கு ஒரு வழியை உருவாக்கினார். இந்நிலையில் அவர் தனது சக நடிகரான கருணாஸ் கைது குறித்து அதிரடி கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சில நாட்களுக்கு முன்னர் நடிகரும் முக்குலத்தோர் புலிப்படையின் தலைவரும் திருவாடனை தொகுதி எம்எல்ஏவுமான கருணாஸ் சர்ச்சைக்குறிய விதமகா பேசினார். சாதி ரீதியாக கலவரத்தை ஏற்படுத்தும் விதமாகவும், முதல்வரையும், காவல்துறையையும் விமர்சித்து பேசினார்.

இதனையடுத்து கருணாஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து கருணாஸ் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் சர்ச்சைக்குறிய வகையில் பேசிய பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ஏன் கைது செய்யப்படவில்லை என்ற கண்டனங்களும் எழுந்து வருகிறது.

இந்நிலையில் சண்டக்கோழி இரண்டாம் பாகம் படத்துக்காக செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விஷாலிடம் கருணாஸ் கைது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், நடிகர் கருணாஸை போலீசார் கைது செய்துள்ளனர். பேச்சு சுதந்திரம் ஒரு எல்லைக்குள்தான் இருக்க வேண்டும். கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும். அந்த எல்லையை அவர் தாண்டியதால்தான் சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து உள்ளார்கள் என்ற ரீதியில்தான் நான் இதனை பார்க்கிறேன் என்றார். மேலும், கருணாஸை கைது செய்தது தவறல்ல. எச்.ராஜா, எஸ்.வி.சேகர் ஆகியோருக்கும் இது பொருந்தும் என்றார்.

seithichurul

Trending

Exit mobile version