தமிழ்நாடு
திமுகவுக்கும் ஆதரவு இல்லை: சீட் கிடைக்காததால் கருணாஸ் எடுத்த அதிரடி முடிவு!
தேர்தல் நேரத்தில் பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ள சின்ன கட்சிகளின் அட்ராசிட்டி காமெடியாக இருக்கும் என்பது தெரிந்ததே. அந்த வகையில் கூட்டணியில் இணைத்துக் கொண்டு தாங்கள் எதிர்பார்த்த சீட் கொடுத்தால் நல்ல கூட்டணி என்றும், இல்லை என்றால் வெளியே வந்து அது மோசமான கூட்டணி என்று சொல்லும் கட்சிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது,
அந்த வகையில் சமீபத்தில் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய கருணாஸ், திமுகவுக்கு ஆதரவு என்று அறிவித்தார். ஆனால் தற்போது மீண்டும் திமுகவுக்கு ஆதரவு இல்லை என்றும் திமுகவுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார்.
அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் ஒரே ஒரு தொகுதிக்காக பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் ஆனால் திமுக தரப்பில் இருந்து கருணாசுக்கு தொகுதி தர முடியாது என்று கூறிவிட்டதாகவும் இதனையடுத்தே திமுகவுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக கருணாஸ் கூறியதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது,
அதை போல் திமுகவுக்கு ஆதரவு அளித்த தமிமுன் அன்சாரியும் தனது ஆதரவை வாபஸ் பெற்று உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த நிலையில் அதிமுக கூட்டணியிலும் இல்லாமல், திமுக கூட்டணியிலும் இல்லாமல் இருக்கும் இருவரும் அடுத்த கட்டமாக என்ன செய்வார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.