தமிழ்நாடு
அண்ணாவுடன் உறங்க சென்றார் கலைஞர்..!
திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் செவ்வாய்க்கிழமை இறந்ததை அடுத்து அண்ணா சமாதி அருகில் தான் நல்லடக்கம் செய்யப்படுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அதில் இருந்த சிக்கல்கள் எல்லாம் புதன் கிழமை காலையுடன் தீர்ந்தது.
எனவே இன்று மாலை 4 மணியளவில் கருணாநிதி அவர்களின் இறுதி ஊர்வலம் மெரினா கொண்டு செல்லப்பட்டு அரசு மரியாதையுடன் குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது.
நல்லடக்கம் செய்யும் போது ராகுல் காந்தி, தேவ கவுடா, சந்திரபாபு நாய்டு உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர்.