தமிழ்நாடு
கருணாநிதி உடல்நிலையில் மீண்டும் சுணக்கம்.. காவேரி மருத்துவமனை முன் பரபரப்பு
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலையில் திடீர் என்று சுணக்கம் ஏற்பட்டு இருக்கிறது.
திமுக தலைவர் கருணாநிதிக்கு 10வது நாளாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் அவரது உடல்நிலையில் திடீர் என்று சுணக்கம் ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் என்ன மாதிரியான பிரச்சனை என்று இதுவரை அறிக்கை வெளியாகவில்லை.
ஸ்டாலின், தயாளு அம்மாள், கனிமொழி உள்ளிட்ட கருணாநிதி குடும்பத்தினர் மீண்டும் காவேரி மருத்துவமனைக்கு வருகை புரிந்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.
தற்போது கருணாநிதி சிகிச்சை பெற்று வரும் காவேரி மருத்துவமனை முன் மீண்டும் திமுக தொண்டர்கள் கூடி வருகிறார்கள். இதனால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.