சினிமா செய்திகள்
சுல்தானாக மாறிய கார்த்தி!
சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன், அடுத்ததாக கார்த்தி மற்றும் ராஷ்மிகாவை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார்.
இந்த படத்திற்கு சுல்தான் என தலைப்பிட்டுள்ளனர். ரஜினி நடிப்பில் வெளியான கோச்சடையான் படத்திற்கு ஆரம்பத்தில் சுல்தான் தி வாரியர் என்ற டைட்டிலில் தான் செளந்தர்யா ரஜினிகாந்த் அனிமேஷன் ஒர்க்குகளை செய்து வந்த நிலையில், தற்போது சுல்தான் டைட்டில் கார்த்திக்கு சென்றுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு, தான் சுல்தான் படத்தின் ஷூட்டிங்கில் இருப்பதாக ராஷ்மிகா தனது இன்ஸ்டாகிராமில், படத்தின் தலைப்பை ஏற்கனவே லீக் செய்து விட்டார். இதனால், படக்குழுவினர் அதிருப்தி அடைய உடனடியாக அந்த பதிவை அவர் டெலிட் செய்த வேடிக்கையும் நடந்தது.
இந்நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாக படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகரம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி படத்தில் நடித்து முடித்துள்ள கார்த்தி அதன் ரிலீசுக்காக காத்திருக்கிறார்.