சினிமா செய்திகள்

தனுஷ் படத்தில் இருந்து விலகிவிட்டாரா கார்த்திக் நரேன்? பரபரப்பு தகவல்!

Published

on

தனுஷ் நடித்து வரும் 43வது படத்தை இயக்கி வரும் இயக்குனர் கார்த்திக் நரேன் திடீரென அந்த படத்தில் இருந்து விலகி விட்டதாக கோலிவுட்டில் ஒரு செய்தி பரவி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தனுஷ் நடிப்பில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘D43’. இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நடந்த நிலையில் தற்போது மீண்டும் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் படப்பிடிப்பின் போது திடீரென கார்த்திக் நரேன் வரவில்லை என்றும் அவருக்கு பதிலாக தனுஷ் மற்றும் அவருடைய நெருங்கிய நண்பரும் இயக்குனருமான சுப்ரமணிய சிவாவும் தான் படத்தை இயக்கியதாகவும் கூறப்பட்டது. இதனால் கார்த்திக் நரேன் இந்த படத்தில் இருந்து விலகி விட்டதாக வதந்தி ஒன்று மிக வேகமாக பரவி வருகிறது.

ஏற்கனவே கார்த்திக் நரேனின் திரைக்கதையில் திருப்தி இல்லை என்பதால்தான் கேரளாவில் இருந்து இரண்டு திரைக்கதை ஆசிரியர்களை தனுஷ் வரவழைத்தார் என்றும் அவர்களுடைய திரைக்கதையில் தான் தற்போது படம் உருவாகி வருகிறது அதில் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கார்த்திக் நரேன் இயக்கத்திலும் தனுஷ்க்கு திருப்தி இல்லை என்பதால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் அதனை அடுத்து கார்த்திக் நரேன் இந்த படத்தில் இருந்து விலகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இவ்வாறு வெளிவந்து கொண்டிருக்கும் செய்தி உண்மைக்கு முரணானது என்றும் கார்த்திக் நரேன் தான் இப்பொழுது இந்த படத்தை இயக்கி வருகிறார் என்றும், அவர் அந்த படத்தில் இருந்து விலகுவதற்கு வாய்ப்பே இல்லை என்றும் படக்குழுவினர் தெரிவித்து வருகின்றனர்.

Trending

Exit mobile version