சினிமா செய்திகள்

சூர்யாவின் கொரோனா பாதிப்பு எந்த அளவில் உள்ளது: கார்த்தியின் டுவீட்!

Published

on

நடிகர் சூர்யா தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் தற்போது சிகிச்சையில் இருப்பதாகவும் தற்போது தனது உடல் நலம் சீராக இருப்பதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் டுவிட் ஒன்றை பதிவு செய்து இருந்தார்.

இந்த ட்வீட்டை பார்த்த அவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் திரை உலகமும் பெரும் அதிர்ச்சி அடைந்து அவர் விரைவில் குணமாக வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில் சூர்யாவின் உடல்நலம் தேறி வருவதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன. இந்த நிலையில் தற்போது சூர்யாவின் சகோதரர் கார்த்தி தனது டுவிட்டரில் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் ’அண்ணா வீடு திரும்பிவிட்டார். நலமுடன் இருக்கிறார். அவர் தற்போது வீட்டில் சில நாட்களில் தனிமைப்படுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியதை அடுத்து தனிமையில் இருக்கிறார். உங்கள் அனைவரின் வாழ்த்துக்கள் மற்றும் பிரார்த்தனைகளுக்கு மிகவும் நன்றி’ என கூறியுள்ளார்.

இதனையடுத்து சூர்யாவின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து விரைவில் அவர் படப்பிடிப்புக்கு வருவார் என்றும், நாங்கள் அவர் எப்போது வெளியே வருவார் என்று காத்திருக்கின்றோம் என்றும் கமெண்ட் பகுதியில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version