சினிமா செய்திகள்

’யாரையும் இவ்வளவு அழகா பார்க்கலை’: சுல்தான் பட நிறுவனத்தின் புதிய அறிவிப்பு!

Published

on

நடிகர் கார்த்தி நடித்த சுல்தான் திரைப்படம் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் ’யாரும் இவ்வளவு அழகா பார்க்கலை’என்று விளம்பரம் செய்து உள்ளது.

இந்த படத்தின் சிங்கிள் பாடல் ஏற்கனவே வெளிவந்து உள்ளது என்பதும் அதேபோல் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் சிங்கிள் பாடலின் டைட்டில் தான் ’யாரும் இவ்வளவு அழகா பார்க்கலை’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பாடல் வரும் வெள்ளியன்று இரவு 7 மணிக்கு வெளியாகும் என்று பட நிறுவனம் விளம்பரம் செய்துள்ளது. விவேக்-மெர்வின் கம்போஸ் செய்துள்ள இந்த பாடலை எதிர்பார்த்து கார்த்தி ரசிகர்கள் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்திக் ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள இந்த படத்தில் நெப்போலியன், லால், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயன் நடித்த ’ரெமோ’ திரைப்படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version