சினிமா செய்திகள்

திரையரங்குகளில் ரிலீசான ஒரே மாதத்தில் ஓடிடி ரிலீஸ்: ‘சுல்தான்’ தயாரிப்பாளரின் திட்டம்!

Published

on

நடிகர் கார்த்தி மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’சுல்தான்’. இந்த படத்தின் படப்பிடிப்புகள் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்து வரும் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாக உள்ளது. ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஏப்ரல் 2ஆம் தேதி ‘சுல்தான்’ ரிலீஸ் செய்வதை தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் ‘சுல்தான்’ படம் ரிலீஸ் ஆவதால் ஏப்ரல் 2ஆம் தேதி தான் சரியான ரிலீஸ் தேதியாக இருக்கும் என்று தான் கருதுவதாக தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு அவர்கள் தெரிவித்துள்ளார்

மேலும் இந்த திரைப்படம் திரையரங்கில் ரிலீஸ் ஆகி ஒரே மாதத்தில் ஹாட்ஸ்டார் ஓடிடியிலும் வெளியிட தயாரிப்பாளர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. திரையரங்கில் ரிலீஸ் ஆகும் திரைப்படம் குறைந்தது இரண்டு மாதங்கள் கழித்து தான் ஓடிடியில் வெளியிட வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் நிபந்தனை விதிக்கும் நிலையில் தயாரிப்பாளர் இந்த முடிவை எடுத்துள்ளது ஆச்சரியத்தை அளித்துள்ளது

ஆனால் அதே நேரத்தில் திரையரங்குகளில் சில பகுதிகளில் அவர் சொந்தமாக ரிலீஸ் செய்யப் போவதாகவும் ஒரு மாதத்தில் ஓடிடியில் ரிலீஸ் என்றும், அதற்கு ஒப்புக் கொள்பவர்கள் மட்டுமே தனது படத்தை அவர் விநியோகத்திற்கு கொடுக்கப் போவதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

Trending

Exit mobile version