சினிமா

தனுஷைத் தொடர்ந்து கவினுக்கு வாழ்த்து சொன்ன கார்த்தி!

Published

on

‘டாடா’ படத்திற்காக நடிகர் கார்த்தி, கவினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கணேஷ் பாபு இயக்கத்தில் நடிகர்கள் கவின், அபர்ணாதாஸ் உள்ளிட்டப் பலருடைய நடிப்பில் வெளியான ‘டாடா’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தினைப் பார்த்துவிட்டு நடிகர் தனுஷ் தொலைபேசியில் நடிகர் கவினை அழைத்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்து இருந்தார். இதனை நடிகர் கவினும் தனது சமூகவலைதளப் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்திருந்தார்.

Karthi

நடிகர் தனுஷை அடுத்து தற்போது நடிகர் கார்த்தியும் ‘டாடா’ படத்திற்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சமூகவலைதளத்தில் அவர் பகிர்ந்திருப்பதாவது, ”டாடா’ பார்த்துவிட்டேன். சிறந்த படம்! நல்ல திரைக்கதை மற்றும் அதை படமாக்கி இருப்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. எல்லோருமே சிறப்பாக நடித்திருந்தார்கள். கவின் முழுமையான மிகையில்லாத நடிப்பைக் கொடுத்திருக்கிறார். அணியினர் அனைவருக்கும் வாழ்த்துகள்!’ எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கு நடிகர் கவின், ‘எங்களுக்குள் ஐந்து நிமிட உரையாடல் நடந்தது. கார்த்தி சார் சொன்னது எல்லாமே எனக்கு நியாபகம் இருந்தாலும், ‘இந்தப் படத்தை எப்போதும் நினைவில் வைத்திருப்பேன்’ என நீங்கள் சொன்னதை நான் எப்போதும் மறக்க மாட்டேன். வாழ்க வளமுடன் வந்தியத்தேவன்’ என ட்விட்டரில் நன்றி சொல்லி பதிலளித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version