சினிமா செய்திகள்
பொன்னியின் செல்வன் படத்தில் கார்த்தியின் கதாபாத்திரம் என்ன தெரியுமா?
![dc-Cover-48n768dts1ru0aetg9pkg1aa72-20171126230121.Medi - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/03/dc-Cover-48n768dts1ru0aetg9pkg1aa72-20171126230121.Medi_.jpeg)
எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற ஜாம்பவான்கள் முயற்சி செய்து முடியாமல் போன பொன்னியின் செல்வன் படத்தை ஒருவழியாக நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு, இயக்குநர் மணிரத்னம் இயக்கவுள்ளார் என்பது உறுதியாகி விட்டது.
விக்ரம், ஜெயம்ரவி, சிம்பு, கார்த்தி, அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் என பிரபல நடிகர்கள் இந்த படத்தில் இணைய உள்ளனர்.
தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜராஜ சோழன் குறித்த புனைவு கதையான பொன்னியின் செல்வன் வரலாற்றை கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதினார்.
புத்தக கண்காட்சிகளில் இன்றளவும் அந்த பொன்னியின் செல்வன் கதைக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.
அந்த புனைவு வரலாற்றில், வந்தியத்தேவன் எனும் கற்பனை கதாபாத்திரம் கதையை ஆரம்பம் முதல் இறுதி வரை நகர்த்திச் செல்லும் அந்த வேடத்தில் நடிக்க விஜய் சேதுபதியை மணிரத்னம் அணுகினார். ஆனால், கால்ஷீட் பிரச்னை காரணமாக, விஜய்சேதுபதி நடிக்க மறுக்க, அந்த வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் கார்த்தி நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.