Connect with us

வணிகம்

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

Published

on

பெங்களூரு: கர்நாடக மாநிலத்திலுள்ள ஐடி நிறுவனங்கள், கடைகளின் சட்டம் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தம் செய்து, வேலை நேரத்தை 14 மணி நேரமாக (12 மணி நேர வேலை + 2 மணி நேரம் கூடுதல் வேலை – Overtime) அதிகரிக்க மாநில அரசைக் கேட்டுக் கொண்டுள்ளன. இந்த யோசனைக்கு ஊழியர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தற்போதைய கர்நாடக கடைகளின் சட்டம் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டம், ஒரு நாளைக்கு 10 மணி நேர வேலை + 2 மணி நேரம் கூடுதல் வேலை (Overtime) என்று 12 மணிநேரத்துக்கு அனுமதிக்கிறது. ஐடி நிறுவனங்கள் இந்த வரம்பை 14 மணி நேரமாக அதிகரிக்க விரும்புகின்றன. அதாவது, ஒரு ஊழியர் அதிகபட்சமாகத் தொடர்ந்து 3 மாதங்களுக்கு ஒரு மாதத்திற்கு 125 மணி நேரம் வரை வேலை செய்ய வேண்டியிருக்கும்.

மாநில அரசு இந்த விஷயத்தில் ஆரம்பக் கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது என்றும், விரைவில் அமைச்சரவையில் இது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் தகவல்.

ஏன் 14 மணி நேர வேலை நாள்?

ஐடி நிறுவனங்கள் இந்த யோசனைக்குப் பின்னால் உள்ள காரணங்கள் தெளிவாக இல்லை. இருப்பினும், அதிகரித்து வரும் பணிச்சுமை மற்றும் திட்டக் காலக்கெடுக்களைப் பூர்த்தி செய்வதற்காக இது இருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது.

எதிர்ப்புகள்:

  • இந்த நீண்ட வேலை நேரங்கள் ஊழியர்களின் ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் பாதிக்கும் என்று தொழிற்சங்கங்கள் கவலைப்படுகின்றன.
  • இதனால் அதிக வேலை இழப்புகள் ஏற்படும். ஏனென்றால் அதிக வேலை நேரம் தேவைப்பட்டால், நிறுவனங்கள் குறைவான பணியாளர்களை பணியமர்த்த முடியும்.
  • வேலையின்மை அதிகரிக்கும்
  • இந்த நீண்ட வேலை நேரங்கள் உற்பத்தித்திறனைக் குறைக்கும் என்றும் சிலர் வாதிடுகின்றனர். ஏனென்றால், ஊழியர்கள் சோர்வடைந்து, கவனம் செலுத்துவதில் சிக்கல் இருக்கும்.

கனரா சேம்பர் ஆஃப் காமர்ஸ் & இன்டஸ்ட்ரி வெளியிட்டுள்ள ஆய்வு தகவலின் படி, ஐடி துறையில் 45% ஊழியர்களுக்கு மன அழுத்தம் நோய் பாதிப்புகள் உள்ளது. வேலை நேரத்தை அதிகரித்தால் இது மேலும் அதிகரிக்கும் எனத் தெரிவித்துள்ளது.

கன்னடர்களுக்கே முன்னுரிமை

அண்மையில் தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற மசோதாவைத் தாக்கல் செய்து, அதற்கு நாஸ்காம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பை தொடர்ந்து அதிலிருந்து கர்நாடக அரசு பின் வாங்கியது. இப்போது ஐடி நிறுவனங்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கர்நாடக அரசு வேலை நேரத்தை நீடிக்குமா எனப் பொருத்து இருந்து பார்ப்போம்.

author avatar
Tamilarasu
ஆரோக்கியம்1 மணி நேரம் ago

பப்பாளி பழத்துடன் சேர்த்து சாப்பிடக் கூடாத 5 உணவுகள்!

இந்தியா3 மணி நேரங்கள் ago

நிதி ஆயோக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி மைக் ஆஃப்! கடுப்புடன் வெளியேறினார்!

தினபலன்9 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் : சனிக்கிழமை (27-07-2024)

விமர்சனம்20 மணி நேரங்கள் ago

ராயன் திரை விமர்சனம் | Raayan – Movie Review

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

ஆடி கிருத்திகைக்கு திருத்தணி முருகன் கோயில் கட்டணச் சலுகை!

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

சங்கடஹர சதுர்த்தி: தேனியில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்!

கிரிக்கெட்23 மணி நேரங்கள் ago

IND vs SL 2024: முதல் T20-ல் மழை இல்லை, வானிலை சாதகமாக உள்ளது!

சினிமா23 மணி நேரங்கள் ago

ரஜினிகாந்த்: பேரனுக்காக ஒரு அன்பான தாத்தா!

செய்திகள்24 மணி நேரங்கள் ago

வாட்ஸ்அப்பில் புதிய மாற்றம்: இன்ஸ்டாகிராம் ஸ்டைல் மென்ஷன் வசதி!

ஆன்மீகம்1 நாள் ago

ஆடி மாதத்தில் அம்மன் கோவிலில் கூழ் ஊற்றுவது ஏன்? – ஒரு விரிவான பார்வை

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்4 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

ஆன்மீகம்7 நாட்கள் ago

ஆடி பௌர்ணமி சிறப்புகள் என்ன?

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்3 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்4 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்6 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!