இந்தியா

மேகதாது அணையை கட்டியே தீருவோம்: கர்நாடகா உள்துறை அமைச்சர் ஆவேசம்!

Published

on

மேகதாது அணையை கட்டியே தீருவோம் என கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை பேட்டி அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே மேகதாது அணை பிரச்சனை கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தாலும் கடந்த சில நாட்களாக தீவிரமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கர்நாடகாவில் மேகதாது அணையை கட்டியே தீருவோம் என கர்நாடக அரசும், மேகதாது அணை கட்டக்கூடாது என தமிழக அரசும் கூறி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் டெல்லி சென்ற தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் மேகதாது அணையை கட்ட விடமாட்டோம் என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இன்று திமுக தலைவரும் முதலமைச்சருமான முக ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் கூடி, கர்நாடகாவில் மேகதாது அணையை கட்ட கூடாது என்று தீர்மானம் இயற்றியது. இந்த தீர்மானம் இயற்றிய ஒரு சில நிமிடங்களில் மேகதாது அணையை கட்டியே தீருவோம் என கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பேட்டி அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேகதாது அணைக்கு எதிராக தமிழக அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற நிலையில் பசவராஜ் இந்த பேட்டி அளித்தபோது, ‘மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்றும், மேகதாதுவில் அணை கட்ட உச்சநீதிமன்றம் எந்த தடையும் விதிக்கவில்லை என்று கூறினார். மேலும் கர்நாடகாவின் கோரிக்கையை மத்திய அரசு சட்டரீதியாக பரிசீலிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

seithichurul

Trending

Exit mobile version