இந்தியா
புத்தாண்டு கொண்டாட்டத்துக்குத் தடை.. கர்நாடக அரசு அதிரடி முடிவு!
2021-ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்துக்குக் கர்நாடக அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
சமூக இடைவெளி இல்லாமல் பொது இடங்கள், நிறுவனங்கள், உணவகங்கள், விடுதிகள் என எங்கும் புத்தாண்டின் போது பொது மக்கள் கூடக் கூடாது.
இது கோவிட்-19 காலம் என்பதால், இந்த தடையை டிசம்பர் 30 முதல் ஜனவரி 2-ம் தேதி வரை கடைப்பிடிக்க வேண்டும் என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
அதே நேரம் வழக்கம் போல கிளப், பப் மற்றும் ரெஸ்டாரண்ட்கள் இயங்கலாம். புத்தாண்டுக்கு என சிறப்பு நிகழ்வுகள் மட்டும் ஏதும் இருக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல ஒரு அறிவிப்பைத் தமிழ்நாடு அரசும் வெளியிட அதிக வாய்ப்புகள் உள்ளது.