இந்தியா
கர்நாடக மாநில துணை சபாநாயகர் தற்கொலை!
கர்நாடக மாநில துணை சபாநாயகர் எஸ்.எல்.தர்மே, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
கர்நாடகாவில் மாநில துணை சபாநாயகராக பொறுப்பு வகித்து வந்தவர் எஸ்.எல். தர்மே. இவர் அங்குள்ள சிக்மகளூர் அருகே வேகமாக வந்த ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், தர்மேவின் சடலத்தை மீட்டனர்.
மேலும், தர்மே கைபட எழுதிய தற்கொலை கடிதம் ஒன்றும் சிக்கியுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்த விவரங்கள் இதுவரையில் வெளிவரவில்லை.
தர்மே மரணம் குறித்து முன்னாள் பிரதமர் எச்.டி.தேவகவுடா இரங்கல் தெரிவித்துள்ளார். தர்மே ஒழுக்கமான நல்ல மனிதர். அவரது இழப்பு மாநிலத்திற்கு பேரிழப்பு என்று கூறியுள்ளார்.
மாநில துணை சபாநாயகரே தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.