இந்தியா

ஆகஸ்ட் 23 முதல் பள்ளிகள் திறக்கப்படும்: முதல்வர் அறிவிப்பு!

Published

on

ஆகஸ்ட் 23-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என கர்நாடக முதல்வர் பசவப்பா பொம்மை அவர்கள் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகள் மூடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இதனை அடுத்து தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு நாடு முழுவதும் குறைந்து வருவதை அடுத்து விரைவில் பள்ளிகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் உள்பட ஒருசில மாநிலங்களில் ஏற்கனவே பள்ளிகள் திறக்கப்பட்டு விட்டன என்பதும் சில மாநிலங்களில் விரைவில் பள்ளி திறக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கர்நாடகாவில் ஆகஸ்ட் 23-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மை அவர்கள் அறிவித்துள்ளார்

முதல்கட்டமாக 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அதனை அடுத்து படிப்படியாக மற்ற வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். கர்நாடகாவை அடுத்து தமிழகத்திலும் பள்ளிகள் திறக்கும் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

seithichurul

Trending

Exit mobile version