இந்தியா
உ.பி-யில் இருவருக்கு ‘கப்பா’ கொரோனா வகை பாதிப்பு!
உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருவருக்கு ‘கப்பா’ வகை கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
உலக அளவில் கொரோனா தொற்றின் டெல்டா வகை மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. டெல்டா வகை கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக உலகின் பல நாடுகளில் மீண்டும் நோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு நாடுகள் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.
டெல்டா வகை கொரோனா தொற்று முதன் முதலில் இந்தியாவில் தான் அதிகமாக பரவத் தொடங்கியது. இந்தியாவில் இரண்டாவது கொரோனா அலையின் போது பலர் பாதிக்கப்பட்டது இந்த வகை கொரோனா தொற்றினால் தான். தற்போது இந்தியாவில் இந்த கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ள நிலையில், உத்தரப் பிரதேசத்தில் கப்பா கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
டெல்டா வகை கொரோனா தொற்றுப் போலவே கப்பா கொரோனா தொற்றும் அதிவேகமாக பரவக்கூடும் எனப்படுகிறது.