தமிழ்நாடு
பள்ளிகளுக்கு இன்று விடுமுறை: அதிரடி அறிவிப்பு!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனை அடுத்து ஒரு சில இடங்களில் மட்டும் பள்ளிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி தென்காசி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக நேற்று இரவு முதல் கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்து உள்ளது என்பதும் மழை பெய்த பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் மட்டும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை என சற்றுமுன்னர் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார். இதனை அடுத்து பள்ளி மாணவர்கள் பாதுகாப்புடன் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது
மேலும் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் அந்த பகுதிகளிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.