தமிழ்நாடு
புதிய காற்றழுத்த தாழ்வு: இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
![kumari rain - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/11/kumari-rain.jpg)
வங்கக் கடலில் தோன்றிய புதிய காற்றழுத்த தாழ்வு காரணமாக இன்று ஒரு சில மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் வங்க கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு தோன்றியது என்பதும் இந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்து வந்தது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் தற்போது புதிய காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து அந்தமான் கடல் அருகே நிலைகொண்டுள்ளது இது மேலும் வலுவடைந்து நாளை தென் மாவட்டங்களிலும் வட கடலோர மாவட்டங்களை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மிக கனமழை பெய்யும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் கன்னியாகுமரி கடல் பகுதியில் காற்று மிக வேகமாக வீசும் என்றும் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்றும் எனவே மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் மழை தொடங்கியுள்ளதாகவும் இன்று முழுவதும் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக நெல்லை, தேனி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக வட கடலோர மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.