சினிமா செய்திகள்
Kantara: ஆங்கிலத்தில் வெளியான காந்தாரா!
கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து கன்னடத்தில் வெளியான திரைப்படம் ‘காந்தாரா’. கிஷோர், சப்தமி கௌடா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்த இப்படத்தை ஹோம்பலே ஃபில்ம்ஸ் தயாரித்தது. கேஜிஎஃப் 1&2 படங்களுக்குப் பிறகு கன்னட சினிமாவை அடுத்த தளத்துக்கு கொண்டு சென்ற படமாக அமைந்தது.
16 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் வெளியாகி, உலகம் முழுவதும் 400 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. கன்னட திரையுலகத்தில் மாபெரும் வரவேற்பை பெற்ற இப்படத்தினை தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகி அமோகமான வரவேற்பை பெற்றது.
Get enchanted by the divinity ❤️????#KantaraOnNetflix, now available in English on @netflix. https://t.co/DRec9C6DXK#Kantara #VijayKiragandur @hombalefilms @gowda_sapthami @AJANEESHB @actorkishore @HombaleGroup @KantaraFilm pic.twitter.com/d2bFBCIWa0
— Rishab Shetty (@shetty_rishab) February 11, 2023
அதை தொடர்ந்து நெட்ஃபிளிக்ஸ் OTT தளத்தில் காந்தாரா திரைப்படம் தற்போது ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளது என்ற தகவலை தனது ட்விட்டர் பக்கம் மூலம் அறிவித்துள்ளார் படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர் ரிஷப் ஷெட்டி.
‘கந்தாரா’ படத்தின் 100 நாள் வெற்றி விழாவின் போது, படத்தின் இரண்டாம் பாகம் 2024-ம் ஆண்டு வெளியாகும் என ரிஷப் சமீபத்தில் அறிவித்தார். ‘கந்தாரா 2’ படத்தின் தொடர்ச்சியாக இல்லாமல், முன்கதையாக இருக்கும் என்றும் ரிஷப் தெரிவித்துள்ளார். படத்தின் அடுத்த பாகம் , முதல் பாகத்திலிருந்து பல வருடங்களுக்கு முன் நடந்த சம்பவங்களை உள்ளடக்கி தெய்வத்தின் வரலாற்றைக் கூறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்போது ரிஷப்பின் குழு ‘கந்தாரா 2’ படத்திற்கான ஆய்வுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.