தமிழ்நாடு

பாரதமாதா குறித்த சர்ச்சை பேச்சு: தலைமறைவாக இருந்த பாதிரியார் கைது!

Published

on

ஜாதி, மதம் மற்றும் மத்திய, மாநில அரசுகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாதிரியார் பொன்னையா அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்

சமீபத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த விழா ஒன்றில் பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பாரத மாதாவின் அசிங்கம் தங்கள் மீது படாமல் இருப்பதற்காகவே ஷூ அணிந்து இருப்பதாக சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்

மேலும் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாதிரியார் ஜார்ஜ், சிறுபான்மையோர் மக்கள் போட்ட பிச்சையின் காரணமாக தான் திமுக தற்போது ஆட்சிக்கு வந்துள்ளது என்றும் ஆனால் திமுக அமைச்சர்கள் தற்போது இந்துக் கோயில்களுக்குச் செல்கிறார்கள் என்றும் இந்துக்கள் அவர்களுக்கு ஓட்டு போடவில்லை என்றும் கூறினார்

இதனை அடுத்து பாஜகவினர் மற்றும் இந்து அமைப்புகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் அவர் தலைமறைவாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்

இதனை அடுத்து அவர் இன்னும் சில மணி நேரங்களில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாதிரியாரை கைது செய்து அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து அமைப்புகள் கடந்த சில நாட்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version