தமிழ்நாடு
கடலூர் கண்ணகி – முருகேசன் தம்பதி ஆணவ கொலை வழக்கு: 13 ஆண்டுகளுக்கு பின் தீர்ப்பு!
கடலூர் கண்ணகி – முருகேசன் தம்பதி ஆணவ கொலை வழக்கில் 13 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சாதி மறுப்பு திருமணம் செய்த கண்ணகி – முருகேசன் தம்பதி கடந்த 2003ஆம் ஆண்டு ஜூலை 8-ஆம் தேதி உறவினர்களால் ஆணவ கொலை செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து இந்த வழக்கு நீதிமன்றத்தில் கடந்த 13 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடலூர் கண்ணகி – முருகேசன் தம்பதி ஆணவ கொலை வழக்கில் 13 பேர் குற்றவாளிகள் என நீதிபதிகள் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடலூர் கண்ணகி – முருகேசன் தம்பதியினரை மூக்கு காது வழியாக விஷத்தை ஊற்றி இரண்டு பேரையும் கொன்றதுடன் உடலையும் எரித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த நிலையில் தற்போது கடலூர் சிறப்பு நீதிமன்றம் இந்த அதிரடி தீர்ப்பை வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விருத்தாச்சலம் பகுதியில் குப்பநத்தம் என்ற பகுதியை சேர்ந்த முருகேசன் மற்றும் கண்ணகி தம்பதியினர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 13 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கான தண்டனை குறித்த விவரங்கள் இன்னும் சில மணிநேரங்களில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.