தமிழ்நாடு
தமிழக அமைச்சரின் அறிவிப்பு கனிமொழியை அப்செட் ஆக்கியதா?
தமிழக அமைச்சரின் அறிவிப்பு ஒன்று திமுக எம்பி கனிமொழியை அப்செட் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2007ஆம் ஆண்டு திமுக ஆட்சியின் போது ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் தினத்தில் சென்னை சங்கமம் என்ற நிகழ்ச்சியை கனிமொழி எம்பி நடத்தி வந்தார் என்பதும் அந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழக கலை பண்பாட்டு துறை சார்ந்த நிகழ்ச்சிகள் நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் அதனை அடுத்து அதிமுக ஆட்சியின் பத்து வருடங்களில் சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடைபெறவில்லை. இந்த நிலையில் தற்போது மீண்டும் திமுக ஆட்சி வந்ததை அடுத்து சென்னை சங்கமம் நிகழ்ச்சியை நடத்த அவர் திட்டமிட்டிருந்தார். அதற்கு முன்னோட்டமாக ரஞ்சித்தின் கலைபண்பாட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் திடீரென கலை பண்பாட்டு துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் பொங்கல் தினமான ஜனவரி 14, 15, 16 ஆகிய தேதிகளில் நம்ம ஊர் திருவிழா என்ற நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சென்னை சங்கமம் பதிலுக்கு தான் இந்த நிகழ்ச்சி நடைபெறுவதாக கனிமொழி வட்டாரங்கள் கூறுகின்றன. சென்னை சங்கமம் நிகழ்ச்சியை மீண்டும் நடத்துவது குறித்து கனிமொழி எம்பி திட்டமிட்டிருந்த நிலையில் அமைச்சரின் இந்த அறிவிப்பால் கனிமொழி அப்செட் ஆகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே கட்சியிலிருந்து கனிமொழி ஒதுக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது இந்த சம்பவம் மேலும் அதனை உறுதி செய்துள்ளதாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.