தமிழ்நாடு

தமிழிசைக்கு கனிமொழி நெத்தியடி பதில்: வெற்றிபெற்றுவிட்டு பேசுங்கள்!

Published

on

பாஜக ஒரு தொகுதியிலாவது வெற்றிபெற்றுவிட்டு திமுகவின் வெற்றி குறித்து பேசட்டும் என திமுகவின் கனிமொழி எம்பி பாஜக தலைவர் தமிழிசைக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

நடந்து முடிந்த வேலூர் மக்களவை தேர்தலில் கடும் இழுபறிக்கு பின்னர் திமுகவின் கதிர் ஆனந்த் வெற்றிபெற்றார். இந்நிலையில் இதுகுறித்து நாகர்கோயிலில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை, கடந்த முறை பாஜக, அதிமுகவுக்கு எதிரான பொய்ப் பிரச்சாரம் திமுகவுக்கு அதிக வாக்குகளை பெற்றுத்தந்தது. மக்களவைத் தேர்தலில் திமுகவின் வாக்கு வித்தியாசத்தையும் தற்போதைய வாக்கு வித்தியாசத்தையும் பார்த்தால் இது திமுகவுக்கு தோல்விதான் என்றார்.

இந்நிலையில் இன்று தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழியிடம் தமிழிசையின் கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த கனிமொழி, வேலூரில் திமுகவின் வெற்றி தாமதப்படுத்தப்பட்டதற்கு காரணம் அனைவருக்கும் தெரியும். சூழ்ச்சியின் காரணமாகவே அங்கு ஏப்ரல் மாதம் தேர்தல் நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் வெற்றிபெற்றுள்ளோம். ஒரு தொகுதியிலாவது பாஜக வெற்றிபெற்றதன் பிறகு இதுதொடர்பாக தமிழிசை பேசினால் பரவாயில்லை என்றார் அதிரடியாக.

seithichurul

Trending

Exit mobile version