தமிழ்நாடு
உலக புகைப்பட தினம்: கருணாநிதி எடுத்த அரிய புகைப்படத்தை பகிர்ந்த கனிமொழி!
ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி உலகம் முழுவதும் உலக புகைப்பட தினம் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று உலகம் முழுவதும் உலக புகைப்பட தினம் கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
புகைப்பட கலைஞர்கள் தாங்கள் எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர் என்பதும், அரிய புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் திமுக எம்பி கனிமொழி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் முன்னாள் முதல்வரும் முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதி அவர்கள் எடுத்த புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
மு. கருணாநிதி அவர்கள் கேமராவை கண்ணில் பார்ப்பது போல உள்ள இந்த புகைப்படத்தை எடுத்தவரும் ஒரு பிரபலமான புகைப்பட கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படம் தனக்கு பல நினைவுகளை அள்ளி தருவதாகவும் உலக புகைப்பட தினத்தில் இந்த புகைப்படத்தை பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியுள்ளார்.
மேலும் இன்றைய உலக புகைப்பட தினத்தை கொண்டாடிவரும் புகைப்பட கலைஞர்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துக்கள் என்றும் குறிப்பாக இந்த புகைப்படத்தை எடுத்தவருக்கும் எனது வாழ்த்துக்கள் என்று கனிமொழி அவர்கள் அந்த பதிவில் உள்ளார்.
முன்னாள் முதல்வர் மு கருணாநிதி அவர்கள் புகைப்படம் எடுப்பது போன்ற உள்ள இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
On this World Photography Day, this photo brings back many memories. My hearty wishes to all the photographers who capture the memories of the world, and to the person who captured this photo.#WorldPhotographyDay2021 #RememberingKalaignar #DMK pic.twitter.com/Gty3BS5h2Y
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) August 19, 2021