Connect with us

இந்தியா

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: மக்களவையில் கனிமொழி சரமாரி கேள்வி!

Published

on

தூத்துக்குடி மக்களவை தொகுதியின் திமுக உறுப்பினரான கனிமொழி தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பற்றி நேற்று மக்களவையில் சரமாரியாக கேள்விகளைத் தொடுத்தார்.

கேள்வி நேரத்தில் இது தொடர்பாக பேசிய கனிமொழி, தூத்துக்குடியில் போராடிய அப்பாவி பொதுமக்கள் மீது 2018 மே 22-ஆம் தேதி போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் கொல்லப்பட்டனர். இந்த கொடூர சம்பவத்தால் நாடே அதிர்ந்தது. இது தொடர்பான வழக்கில் மதுரை உயர் நீதிமன்றக் கிளை, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பற்றி சிபிஐ விசாரணை நடத்தி 4 மாதங்களுக்கு வழக்கை முடிக்க வேண்டும் என்று 2018 ஆகஸ்டு 14-ஆம் தேதி உத்தரவிட்டது.

துப்பாக்கிச் சூடு நடந்து ஒருவருடத்துக்கு மேல் ஆகியும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு 10 மாதங்கள் ஆகியும் சிபிஐ ஒரு காவலரின் பெயரை கூட எஃப்ஐஆரில் சேர்க்கவில்லை. சிபிஐ விசாரணையின் நிலை இப்படி இருந்தால், தூத்துக்குடி மக்களுக்கு எவ்வாறு நீதி கிடைப்பது உறுதிப்படுத்தப்படும்? என்றார் கனிமொழி.

மேலும், துப்பாக்கிச் சூட்டால் காயமடைந்தவர்களுக்கு அளிக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகை போதுமான அளவு இல்லாததால் உரிய சிகிச்சை மேற்கொள்ள முடியாமல் தவித்து வருகிறார்கள். துப்பாக்கிச் சூட்டால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு வேலை அளிக்கப்படும் என்ற வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.

துப்பாக்கிச் சூட்டால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களுக்கு நீதி கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் இளையோர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 17 வயதே ஆன ஸ்னோலின் என்ற இளம் பெண் தலையில் குறிபார்த்து சுட்டுக் கொல்லப்பட்டார். தூத்துக்குடி மக்களுக்கு நீதி கிடைத்தே ஆக வேண்டும் என தனது குரலை ஓங்கி ஒலித்தார் கனிமொழி.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்2 நிமிடங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்10 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்10 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு10 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா10 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு10 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்10 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்10 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்3 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

ஓய்வு காலத்தில் நிலையான மாத வருமானம் வழங்கும் 5 சிறந்த திட்டங்கள்!

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?