இந்தியா
பதவியேற்பில் கனிமொழி கூறிய ஒற்றை வார்த்தை: மக்களவையில் பரபரப்பு!
பாஜக தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்து முதல் மக்களவை கூட்ட தொடர் நேற்று தொடங்கியது. இதில் தற்காலிக மக்களவை சபாநாயகராக வீரேந்திர குமார் பதவியேற்றார். அவர் முன்னிலையில் நேற்று பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவினர் பதவியேற்றனர்.
இந்நிலையில் இரண்டாவது நாளான இன்று தமிழக எம்பிகள் பதவியேற்றனர். நேற்று பலர் தங்கள் பிராந்திய மொழிகளில் பதவியேற்றதால் இன்று தமிழக எம்பிக்கள் 39 பேரும் தமிழிலேயே பதவியேற்றனர். பதவியேற்றபின் முடிவில் தமிழக எம்பிக்கள் தங்கள் விருப்பமான வாசகத்தை கூறி முடிவு செய்தனர்.
அப்போது தூத்துக்குடி தொகுதி திமுக எம்பியான கனிமொழி பதவியேற்பின் முடிவில் வாழ்க தமிழ், வாழ்க பெரியார் என கூறி பதவியேற்றார். கனிமொழி பெரியார் பெயரை கூறியதும் மக்களவையில் இருந்த பாஜக உறுப்பினர்கள் ஜெய் ஸ்ரீராம் என தொடர்ந்து கூறி முழக்கமிட்டனர். இதனால் மக்களவையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.