தமிழ்நாடு

தேர்தல் ஆணையத்திற்கு நன்றி; கவச உடையுடன் ஓட்டு போட்ட பின் கனிமொழி டுவீட்!

Published

on

திமுக எம்பி கனிமொழி தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் நேற்று அவர் கவச உடை அணிந்து வாக்களித்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்சில் வாக்குச்சாவடி வரை வந்த அவர் கவச உடை அணிந்து இருந்தார் என்பதும் அந்த வாக்குச் சாவடியில் உள்ள அனைத்து தேர்தல் அதிகாரிகளும் கவச உடை அணிந்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

தனது ஜனநாயக கடமையை ஆற்றுவதற்கு கொரோனா பாதிப்பிலும் கவச உடை அணிந்து வந்து வாக்களித்த கனிமொழிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கவச உடை அணிந்து தனது வாக்கை பதிவு செய்த பின் கனிமொழி தனது டுவிட்டரில் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த டுவீட்டில் அவர் கூறியிருப்பதாவது:

எனது உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும் இன்று என்னால் ஓட்டளிக்க முடிந்தது. நமது அடுத்த அரசை தேர்வு செய்ய, உடல் நல பாதிப்பு ஒரு தடையல்ல என்பதை உறுதி செய்த தேர்தல் ஆணையத்திற்கு நன்றி.

seithichurul

Trending

Exit mobile version