இந்தியா
நாட்டிற்கே வெட்கக்கேடானது இது: மக்களவையில் கிழி கிழியென கிழித்த கனிமொழி!
ரயில்வேயில் மனித கழிவுகளை மனிதர்களே அள்ளும் அவல நிலைகுறித்து இன்று மக்களவையில் பேசிய திமுக எம்பி கனிமொழி ஆவேசமாக சில கருத்துக்களை தெரிவித்தார்.
தூத்துக்குடி மக்களவை தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் கனிமொழி. இவர் மக்களவையில் திமுக குழு துணை தலைவராக உள்ளார். இன்று கனிமொழி ரயில்வேயின் நிலைகுறித்தும் புல்லட் ரயில்கள் குறித்தும் மக்களவையில் பேசினார்.
அப்போது, ரயில்வேயில் இன்னும் பணியாளர்களை கொண்டு மனிதக் கழிவுகளை கைகளால் அள்ளும் அவலம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த செயலால் வெட்கப்பட வேண்டிய நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் நமக்கு புல்லட் ரயில்கள் கிடைத்தாலும் அது முக்கியமில்லை. இரயில்வே துறையில் மனித மலத்தை அள்ளும் வேலையை ஊழியர்கள் நேரடியாக ஈடுபட வேண்டாம் என சொல்லிவிட்டு ஒப்பந்த தொழிலாளர்களை பணியில் அமர்த்தி மனித கழிவுகளை அள்ளி வருகிறது ரயில்வே. இந்த நிகழ்வு இன்னும் தொடர்வது நாட்டிற்கு வெட்கக்கேடானது என்றார் ஆவேசமாக கனிமொழி.