பிரபல நடிகை ஒருவரின் டுவிட்டர் பக்கத்தை ட்விட்டர் நிர்வாகம் முடக்கி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழில் ஜெயம் ரவி நடித்த ’தாம் தூம்’ என்ற படத்தில் நடித்தவரும் தற்போது பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக உள்ளவருமான நடிகை நடிகை கங்கனா ரனாவத் தற்போது தமிழில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ’தலைவி’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே சமூகவலைதளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் கங்கனா ரனாவத் ஆவேசமாக தனது கருத்துக்களை பதிவு செய்து வந்தார். அவருடைய ஒரு சில கருத்துக்கள் சர்ச்சையை வகையில் இருப்பதாக நெட்டிசன்கள் புகார் அளித்து வந்தனர்.
மேலும் அவர் பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிலையில் தற்போது அதிரடியாக கங்கனா ரணாவத் டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளதாக டுவிட்டர் இந்தியா அறிவித்துள்ளது. அவருடைய பக்கத்தில் அக்கவுண்ட் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டுவிட்டர் விதிமுறைகளை கங்கனா மீறியதாகவும், அதனால் அவருடைய டுவிட்டர் பக்கம் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.