பிரபல நடிகை ஒருவர் ஜெயலலிதா, எம்ஜிஆர் மற்றும் கருணாநிதி சமாதிக்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய புகைப்படங்கள் டுவிட்டர் உள்ளிட்ட இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத். இவர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக ‘தலைவி’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பதும் இந்த படம் வரும் 10ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்று சென்னையில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சற்றுமுன் சென்னை வந்த கங்கனா ரனாவத், விமான நிலையத்திலிருந்து நேராக ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதன்பின் எம்ஜிஆர் மற்றும் கருணாநிதி சமாதிக்கு மலர் அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடதக்கது. இன்று மாலை நடைபெறும் ‘தலைவி’ புரமோஷன் விழாவில் கலந்து கொண்ட பின் இரவு அவர் மீண்டும் மும்பை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயலலிதா கேரக்டரில் கங்கனா ரனாவத் நடித்த ‘தலைவி’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் வரும் 10ஆம் தேதி இந்த படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக எம்ஜிஆர் போலவே அச்சு அசலாக நடித்துள்ள அரவிந்த்சாமியை திரையில் பார்க்க எம்ஜிஆரின் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் கடந்த மார்ச் மாதமே ரிலீசுக்கு தயாராகி விட்டாலும் இந்தியா முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டிருந்ததால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டு இருந்தது என்பதும் தற்போது செப்டம்பர் 10-ஆம் தேதி ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.